தத்தி தத்தி நடக்கையிலே…
தாயாக வருகிறாள்,
துள்ளி குதித்து விளையாட…
சகோதரியாய் வருகிறாள்,
தரணி ஆள துடிக்கையிலே…
மனைவியாய் வருகிறாள்,
தள்ளாடும் வயதினிலே…
மகளாய் வருகிறாள்,
ஆதலால் ஆண்களே…
ஆற்றுவோம் நம் கடமையை,
அது யாதெனில்…
போற்றுவோம் பெண்மையை!