கவிதை: பெண்மை போற்றுவோம் – மு. பாலகுமார்

தத்தி தத்தி நடக்கையிலே…

தாயாக வருகிறாள்,

துள்ளி குதித்து விளையாட…

சகோதரியாய் வருகிறாள்,

தரணி ஆள துடிக்கையிலே…

மனைவியாய் வருகிறாள்,

தள்ளாடும் வயதினிலே…

மகளாய் வருகிறாள்,

ஆதலால் ஆண்களே…

ஆற்றுவோம் நம் கடமையை,

அது யாதெனில்…

போற்றுவோம் பெண்மையை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *