கவிதை: ஆகாயத்திற்கு அடுத்த வீடு – மு. மேத்தா

ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
உன்னிடம் கொண்டுவந்து
சேர்த்துவிடும் என்னை
இந்தக் கடிதம்!

எந்த ஊரில்
இருந்தாலென்ன…
என் கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!

எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னை
எட்டிப் பார்க்கிறேன் நான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *